எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். இதனை எதிர்த்து மீனவர்கள் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில் 4 மீனவர்கள் சென்ற படகை இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்தியதில் மலைச்சாமி என்ற மீனவர் உயிரிழந்தார். மற்றொருவர் கடலில் மாயமானார்.
மேலும் இரண்டு பேரை இலங்கை கடற்படை சிறை பிடித்து சென்றது. இந்நிலையில் இறந்த மீனவரின் உடலையும், சிறையில் இருக்கும் மீனவர்களையும் தமிழ்நாடு கொண்டுவரும் வரை போராட்டம் தொடரும் என ராமேஸ்வரம் மீனவர்கள் அறிவித்துள்ளனர்.