திருவாடானையில் 47 ஊராட்சிகளில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் கலைஞரின் கனவு இல்லத் திட்டம் பயனாளிகள் தேர்வு, குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திருவாடானை, ஓரியூர், பாகனூர், கடம்பூர், பழங்குளம், ஆண்டவூரணி, உள்ளிட்ட 47 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்