ராமநாதபுரம்: குழந்தைகள் நடத்திய விழிப்புணர்வு பேரணி

75பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா சின்னக்கீரமங்கலம் திருவாடானை நான்கு ரோடு சந்திப்பு பகுதிகளில் பெற்றோரே! சமூகமே! விழித்திடு என்ற தலைப்பில் திருவெற்றியூர் RC நார்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி குழந்தைகள் நடத்தும் விழிப்புணர்வு பேரணி மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி சில முக்கிய இடங்களில் நடைபெற்றது. 

திருவெற்றியூர் பள்ளி தாளாளர் பவுல்ராஜ், சி.கே.மங்களம் பங்குத்தந்தை சேவியர் சத்திய மூர்த்தி, அன்னாள் சபை, தூய இதய மரியன்னை சபை அருட்சகோதரிகள், அமலவை அருட்சகோதரிகள், சந்திரசேகர் குருக்கள், திருவாடானை மௌலவி. சிராஜூதீன் மதனி (ஆலிமுஸா), திருவெற்றியூர் நார்பர்ட் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மணிகண்டன் குருக்கள் மற்றும் புனித நார்பர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். 

இதில் பாரம்பரிய உணவுகளை பழக்கப்படுத்துங்கள், நாகரீக கலாச்சார ஆடையை உடுத்த கட்டாயப்படுத்துங்கள், தங்களை விட மூத்தோரிடம் பணிவாக நடக்கச் சொல்லுங்கள், தங்கள் பிள்ளைகளின் வாழ்வை சீரழிக்கும் செல்லைத் தவிருங்கள் போன்ற விழிப்புணர்வு அடங்கிய பதாதைகளை ஏந்தி விழிப்புணர்வு நாடகம் மற்றும் விழிப்புணர்வு பேரணி நடத்தினர். திருவாடானை காவல்துறையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

தொடர்புடைய செய்தி