ஒவ்வொரு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளை ஒட்டி பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களின் கேக் சிலைகள் ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரிஸ் சார்பாக வைக்கப்பட்டுவது வழக்கம். இளையராஜா, மரோடானா, பாரதியார் ஆகியோரது கேக் சிலைகள் கடந்த காலங்களில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த வருடமும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையோட்டி தொழில் துறையில் சாதனை புரிந்த திரு ரத்தன் டாட்டா அவர்களது கேக் சிலை வைக்கப்பட்டுள்ளது. தொழிலில் சாதனை புரிந்தது மட்டுமல்ல. அவரது ஈகை குணம் எல்லாரையும் வியக்க வைத்தது. கொரோனா காலங்களில் கூட நிதியினை அள்ளிக் கொடுத்தவர்.
பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.
இந்தக் குரலுக்கு ஏற்ப தன்னுடைய வாழ்வை பிறருக்காக அர்ப்பணித்தவர்.
அவரை போற்றும் வகையில் ராமநாதபுரம் ஐஸ்வர்யா பேக்கரியில் 7 அடி உயர ரத்தன் டாட்டா கேக் சிலை வைக்கப்பட்டது. இந்த கேக் சிலை 60 கிலோ சர்க்கரை மற்றும் 250 முட்டைகளைக் கொண்டு ஆறு நாட்கள் இரவு பகல் பாக்காமல் செய்து உருவாக்கப்பட்டுள்ளது இதனை தனது பேக்கரியின் முன்பாக கண்ணாடி கூண்டுக்குள் வைத்துள்ளனர். இதனை அனைவரும் விரும்பி பார்த்து போட்டோ எடுத்து செல்கின்றனர். இந்த ரத்தன் டாட்டா சிலை பொதுமக்களிடையே நல்ல வரவேற்ப்பனையை பெற்றுள்ளது.