உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்.!

80பார்த்தது
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பயிற்சி முகாம்.!
பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நகா் ஊரமைப்பு துறை சாா்பில் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

இதில் மாவட்ட உதவி இயக்குநா் ஹரி இளம்வழுதி கலந்துகொண்டு பேசியதாவது: நகா், கிராமப் பகுதிகளில் வீடுகள் கட்டும்போது அரசு அனுமதி பெற்று கட்ட வேண்டும். அரசு அனுமதி என்பது உள்ளாட்சி பிரதிநிதிகளால் வழங்கப்படுவது அல்ல. வீடு கட்டுவோா் நகா் ஊரமைப்புத்துறையின் மூலம் முறையான அனுமதி பெற்றே கட்டப்பட வேண்டும். 2. 10. 2023 முதல் அனைத்து கட்டட அனுமதிகளும் இணைய வழியில் மட்டுமே தரப்பட வேண்டும். இதற்கான பிரத்யோக இணைய தளத்தை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா். இதில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி