ராமநாதபுரம் மாவட்டம்
ஏர்வாடி தர்ஹாவின் 851 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க விழா என்னும் சந்தனக் கூடு திருவிழா கொடி யேற்றத்துடன் 09. 05. 25 இன்று மாலை நடைபெற்றதது.
இதில்
பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி மகான் குத்பு சுல்தான் செய்யது இபுராஹீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்ஹாவின் 851 ஆம் ஆண்டு சமூக நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா 09. 05. 2025 இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களில் இருந்து
பல்லாயிரக்கணக்கான யாத்திரீகர்கள் பங்கேற்றனர்.
இதையொட்டி ஏப். 29ல் தர்ஹா ஹக்தார் குழு நிர்வாகிகள் தலைமையில் உலமாக்கள் முன்னிலையில் மவுலீது ஓதப்பட்டு சந்தனக்கூடு திருவிழா தொடங்கியது. ஏர்வாடி முஜாஹிர் நல்ல இபுராஹீம் மஹாலில் இருந்து மேள தாளங்களுடனும், வானவேடிக்கையுடனும் யானை, குதிரை, ஒட்டகங்களுடன் தொடங்கிய
கொடி ஊர்வலம்
தர்ஹாவினை வந்தடைந்தது. இதனை தொடர்ந்து
ராமநாதபுரம் மாவட்ட டவுன் ஹாஜி சலாஹூத்தீன் சிறப்பு துவா ஓதினார். இதையடுத்து இரவு 7 மணி அளவில் கொடியேற்றப்பட்டது.
இதில் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டார்.