இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மீனவரின் விசைப்படகு கடலின் மூழ்கி சேதம்; படகில் இருந்த மீனவர்கள் கரை திரும்பாததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த நிலையில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம் மீனவர்களின் விசைப்படகு மீது மோதியதில் படகு முழுமையாக கடலில் மூழ்கி சேதமடைந்துள்ளது.
மேலும் படகில் இருந்த மீனவர்கள் தற்போது வரை கரை திரும்பாததால் சக மீனவர்கள் காணாமல் போன மீனவர்களை தேடி வருகின்றன இதனால் ராமேஸ்வரம் மீனவர்கள் கவலை அடைந்ததோடு பரபரப்பான சூழலும் உருவாகியுள்ளது.