இராமநாதபுரம் பாரதிநகர் பகுதியில் வசித்து வருபவர் பாண்டியம்மாள் (90). இவர் அவ்வழியாக நடந்து வந்த போது சாலையோரத்தில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து விட்டார். தகவலறிந்த தீயணைப்பு துறையினர் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்த மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக இராமநாதபுரம் மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்