ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை சேர்ந்தவர் கேசவன் அப்பகுதியில் உள்ள கோவிலில் நடைபெற்ற பங்குனி உத்திர திருவிழாவில் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினார். அப்போது எதிர்பாராத விதமாக பூக்குழியில் தவறி விழுந்து காயமடைந்து ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில் நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்