பரமக்குடி எமனேஸ்வரம் அன்னை சாரதா மகளிர் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் பணியாற்றும் நெசவாளர் பிரேமா என்பவர் கூட்டுடன் தூக்கணாங்குருவி இருப்பது போன்று பருத்தி சேலையில் வடிவமைத்துள்ளார். அதன் நாளா புறமும் சிற்பங்கள் வருவது போன்று நெய்திருந்தார். இந்த சேலைக்கு தமிழக அரசு சார்பில் முதல் பரிசு தேர்வு செய்யப்பட்டு ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்பட்டுள்ளது.