கமுதி: காட்டுப்பன்றிகளால் நெல், சோளம், உழுந்து பயிர்கள் சேதம்

64பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள சாத்தூர்நாயக்கன்பட்டி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நெல், சோளம், மிளகாய், பருத்தி, உளுந்து உள்ளிட்ட 200 ஏக்கர் பரப்பளவில் மானாவாரி பயிராக சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர். 

இந்நிலையில் காட்டுப் பன்றிகள் கூட்டமாக வந்து பயிர்களைச் சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால் இரவு, பகலாக வயல்வெளிகளில் விவசாயிகள் காட்டுப் பன்றிகளை விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதில் வித்தியாசமான முறையில் காட்டுப் பன்றிகளை விரட்டுவதற்கு சிறிய அளவிலான மைக் செட் குழாய் ஒன்றை வைத்துக்கொண்டு அதில் நாய் குரைக்கும் மியூசிக் போட்டு விரட்டி வருகின்றனர். 

கடந்த 20 நாட்களுக்கு முன் பெய்த மழையால் ஏற்கனவே நெல், உளுந்து பயிர்கள் தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது. தற்போது மீதமுள்ள பயிர்களையும் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வனத்துறை அதிகாரிகள் தலையிட்டு காட்டுப் பன்றிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி