திருவாடானை அருகே உள்ள திருவெற்றியூரில் பிரசித்திபெற்ற பாகம்பிரியாள் கோவில் தேரோட்டம் கோலாகாலமாக நடந்தது.
நூற்றுக் கனக்கனோர் கலந்துகொண்டார்கள்.
திருவெற்றியூரில் தமிழக்ததில் மிகவும் பிரசித்திபெற்ற கோவில்களில் ஒன்றான ஸ்ரீ பாகம்பிரியாள் சமேத வல்மீகநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு செவ்வாய் வெள்ளி கிழமைகளில் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோவிலுக்கு கடந்த ஏப். 25ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை பௌர்ணமி திருவிழா தொடங்கி ஒவவோர் நாளும் ஸ்ரீ பாகம்பரியாள் சமேத வல்மீகநாதருக்கு சிறப்பு அபிஷேக ஆராதகைள் நடைபெற்றது.
5ம் நாள் திருவிழாவாக திருகல்யாணம் வெகு விமர்சியாக நடைபெற்றது. இன்று காலை சாமி புறப்பட்டு
அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளிய நிலையில் வீதி உலா வந்தது.
இதில் ஏராளமான பெண்களும் ஆண்களம் கலந்துகொண்டு தேர்வடம் பிடித்து ஓம் சக்தி ஓம் சக்கி என்ற கோயில் தெற்கு வாசல் பகுதியில் நிறுத்தினர்.
அதனை தொடர்ந்து மாலை கோவில் தெற்கு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தேரை மாலை பொதுமக்களும் பக்தர்களும்
இழுத்து வீதி உலா வந்து கோவலிலை வந்தடைந்தனர். இத்தேரோட்டத்தை காண வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்துள்ளார்கள்.