கமுதியில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்த ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்செல்விபோஸ்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சி பணிகள் திட்டம் சாா்பில், சமுதாய வளைகாப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் தமிழ்ச்செல்விபோஸ் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சித்ராதேவிஅய்யனாா் முன்னிலை வகித்தாா்.
இதில் கலந்து கொண்ட 130 கா்ப்பிணிகளுக்கு வளையல் அணிவித்து, 5 வகையான உணவுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார ஒருங்கிணைப்பாளா் பிரவீன்குமாா் உள்ளிட்டோா் செய்தனா். முன்னதாக, குழந்தைகள் நல வளா்ச்சித் திட்ட அலுவலா் லாவண்யா வரவேற்றாா். அலுவலக மேற்பாா்வையாளா் சரசு நன்றி கூறினாா்.