கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம்.!

70பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே உள்ள ஆப்பனூர் தெற்கு கோட்டை கிராமத்தில் உள்ள ஶ்ரீபர்மா பீலிக்கான் முனீஸ்வரர் மற்றும் அங்காள பரமேஸ்வரி கோவிலின் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பெரிய மாடு மற்றும் சிறிய மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது

இந்த போட்டியில் பெரிய மாடு பந்தயத்தில் 11 ஜோடி மாட்டு வண்டிகளும், சின்ன மாடு பந்தயத்தில் 15 ஜோடி மாட்டு வண்டிகளும் கலந்து கொண்டன.

இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாடுகளுக்கும், மாட்டு வண்டி ஓட்டிய சாரதிகளுக்கும் ரொக்கப்பரிசு மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

இந்த மாட்டு வண்டி பந்தயத்தில், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன.

இந்த மாட்டு வண்டி போட்டியை பொதுமக்கள் சாலையின் இருபுறங்களும் நின்று மாட்டுவண்டி பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி