ராமேஸ்வரம் மீனவர்கள் 20 பேர் விடுதலை: படகு ஓட்டுநர் மூவருக்கு சிறை தண்டனை - இலங்கை நீதிமன்ற உத்தரவு.!
ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்க சென்று கடந்த நவம்பர் மாதம் 10ஆம் தேதி எல்லை தாண்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின் வழக்கு இன்று ஊர்காவல்துறை நீதிமன்ற நீதிபதி நளினி சுபாஸ்கரன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி மீனவர்கள் 20 பேரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்து உத்தரவிட்டார். மேலும் படகு ஓட்டுனர்கள் மூவருக்கு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
விடுதலை செய்யப்பட்ட 20 மீனவர்களும் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணை தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
சிறை தண்டனை விதிக்கப்பட்ட மூன்று மீனவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.