இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் இன்று (மே 10) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போர் பேரணி நடத்தப்படவுள்ளது. மாலை 5 மணிக்கு சென்னை டிஜிபி அலுவலகம் அருகே தொடங்கும் பேரணி போர் நினைவுச் சின்னம் அருகே நிறைவடையும். இதில், முன்னாள் ராணுவ வீரர்கள், அமைச்சர்கள், பொதுமக்கள் பங்கேற்க உள்ளனர். இந்திய ராணுவத்தின் வீரம், தியாகம், அர்ப்பணிப்பு, தேச ஒற்றுமையை போற்றும் வகையில் இந்த பேரணி நடைபெறுகிறது.
இந்தியா, பாகிஸ்தான் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், முதல் மாநிலமாக தமிழகம் பேரணி நடத்துகிறது.