இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக சென்னையில் இன்று பேரணி நடத்தப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள நிலையில் மாலை 5 மணிக்கு பேரணி தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ளும் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கிடும் வகையில், சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில் 30 இடங்களில் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் தேவையான குடிநீரை கொண்டு வர கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.