எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும்
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா இன்று (ஆகஸ்ட் 01) கேரளாவின் வயநாடுக்கு வருகிறார்கள். நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்திக்கின்றனர். மேப்பாடியில் உள்ள அரசுப்பள்ளி நிவாரண முகாமுக்குச் சென்று ஆறுதல் தெரிவிக்கவுள்ளனர். மேலும் செயின்ட் ஜோசப் பள்ளியில் உள்ள நிவாரண முகாம் டாக்டர் மூப்பன்ஸ் மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள முகாமிற்கும் செல்வார்கள்.