புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை-மதுரை தேசிய நெடுஞ்சாலை இடையபட்டி அருகே விருதுநகரை சேர்ந்த மனோகரன் (53) ஒட்டிச் சென்ற கார் மீது சிவகங்கை மலைக்கோட்டை சேர்ந்த சிவராமன்(21) ஓட்டிச் சென்ற கார் மோதியுள்ளது. இதில் மனோகரன் கார் முன் பகுதி பலத்த சேதமடைந்து நிலையில் அதிர்ஷ்டவசமாக மனோகரன் உயிர் தப்பினார். இது குறித்து விராலிமலை காவல் நிலையத்தில் மனோகரன் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர்.