புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள கலைக்குடிப்பட்டியில் அனுமதியின்றி மணல் கடத்துவதாக அன்னவாசல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அவ்வழியாக வந்த ஒரு டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அனுமதியின்றி மணல் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் சித்துப்பட்டியைச் சேர்ந்த வீரையா என்பவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.