விராலிமலை: விராலிமலை ஒன்றியம் மாத்துார்
தென்னம்பிள்ளை கிராமத்தை சேர்ந்தவர் பால முத்து(65). விவசாயி. வீட்டின் அருகே செல்லும் பாதையை பயன்படுத்துவது தொடர்பாக இவருக் கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர்களுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அந்த பாதை வழியாக பாலமுத்து நடந்து சென்றார். அப்போது அவரது உறவினர்க ளான பெரியசாமி மகன் பால்சாமி(19), கனகராஜ்(30) ஆகிய இருவரும் சேர்ந்து இந்த பாதை வழியாக நடந்து செல்லக்கூடாது என்று கூறி தகராறு செய் தனர். தகராறு முற்றியதில் இருவரும் சேர்ந்து பாலமுத்துவை தாக்கினர். இதில் காயமடைந்த அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப் பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் மாத்துார் போலீசார் வழக்குப்பதிந்து பால்சாமி, கனகராஜ் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.