வெள்ளாற்றுப் பகுதியில் மணல் கடத்திய மினிலாரி பறிமுதல்

62பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே சேந்தாங்கரை வெள்ளாற்று பகுதியில் மணல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். 

அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர் அதில் உரிய அனுமதியின்றி மணல் கடத்தியது தெரியவந்தது. இதனையடுத்து மினி லாரியை பறிமுதல் செய்த போலீசார் மாம்பட்டியை சேர்ந்த தினேஷ் (18) கைது செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி