புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெற்றிவேல் (79) என்பவர் கொன்னக்காட்டுப்பட்டி கலையரங்கம் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இது விராலிமலை காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வெற்றிவேலை விராலிமலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ர. 1900 லங்கர் கட்டை 1, உருட்டு கட்டை 6-யும் பறிமுதல் செய்தனர்.