விராலிமலை: திருச்சி எடமலைப்பட்டிபுதுார்
அன்பிலார் நகரை சேர்ந்தவர் விஜயன் (28). எலக்ட் ரீசியன். நேற்று முன்தினம் பணி நிமித்தமாக திருச் சிபுதுக்கோட்டை ரிங் ரோட்டில் மாத்துார் மின்வாரிய அலுவலகம் அருகே பைக்கில் சென்றார். அப்போது முன்னால் சென்றுக்கொண்டிருந்த டாரஸ் லாரி திடீ ரென பிரேக் பிடிக்கவே, பின்னால் சென்ற விஜயன் கட்டுப்பாட்டை இழந்து லாரி மீது மோதினார். இதில் படுகாயமடைந்த அவர் அதே இடத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து மாத்துார் போலீசார் வழக்குப் பதிந்து லாரி டிரைவர் நாகப்பட்டினத்தை சேர்ந்த சவரி ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.