புதுக்கோட்டை: பள்ளி, கல்லூரி வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

81பார்த்தது
புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மொத்தம் 587 பள்ளி வாகனங்கள் இன்று ஆய்வு செய்யும் பணி நடைபெற்றது. இந்த பணியினை புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பார்வையிட்டு முறையாக வசதிகள் இல்லாத வாகனங்களின் உரிமையை உடனடியாக ரத்து செய்யுங்கள் என அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவை பிறப்பித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பள்ளி வாகனங்களில் தீ விபத்து ஏற்பட்டால் எப்படி அணைப்பது என்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும் முழு ஆண்டு தேர்வு முடிந்து பள்ளிகள் விடுமுறை இருக்கும் நிலையில் தமிழ்நாடு முழுவதும் பள்ளி வாகனங்கள் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் மூலம் அதிரடி ஆய்வு செய்யும்படி நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யும் நிகழ்வு புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி