இலுப்பூர், கீழக்குறிச்சியைச் சேர்ந்தவர் நவீன்ராஜ் என்பவர் பையூரில் நாடகம் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது பாக்கெட்டில் இருந்த ரூ. 40 ஆயிரம் மதிப்பிலான செல்போனை சாங்கிராப்பட்டியைச் சேர்ந்த பழனியப்பன், ராப்பூசலைச் சேர்ந்த சிவா ஆகியோர் எடுத்துக்கொண்டு அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பிரவின் ராஜ் அளித்த புகாரின் பேரில் போலீசார் இருவர் மீது வழக்குபதிவு செய்து விசாரணை.