புதுக்கோட்டை காமராஜபுரம் பகுதியை சேர்ந்த சுமை தூக் கும் தொழிலாளி மாரிமுத்து (40). இவர் வடக்கு ராஜ வீதியில் மின்மாற்றி அருகே நேற்று முன்தினம் பிணமாக கிடந்தார். அவரது உடலில் காயங்கள் இருந்தன.
இதுகுறித்து தகவல் அறிந்த டவுன் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர் மதுபோதையில் அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்தது தெரிந்தது. அவர் உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் போலீசார் அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.