விராலிமலை அடுத்த ராமகவுண்டம்பட்டியைச் சேர்ந்தவர் ஏழுமலை (70). இவர் ராமகவுண்டம்பட்டியில் உள்ள தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ராமகவுண்டம்பட்டி கிளை சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த அடையாளம் தெரியாத நபர் மோதியதில் ஏழுமலைக்கு பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.