புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஓனான் குடியில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா மிக விமர்சையாக நடைபெற்றது. இதில் முக்கிய பகுதியில் இருந்து பால்குடம் காவடி தீச்சட்டி ஏந்தியவாறு ஒவ்வொரு பகுதியிலிருந்து ஊர்வலமாக வந்து கோவிலை சுற்றி வலம் வந்த பின்னர் அம்மனுக்கு கொண்டு செல்லப்பட்ட பால்குடத்தை அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து சாமியை வழிபட்டனர். இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.