பொன்னமராவதி அருகே செல்லூரில் உள்ள பூமிநாதர் ஆரணவல்லி கோயிலில் வாஸ்து நாளை முன்னிட்டு சிறப்பு யாகம் நடந்தது தேனிமலை ராஜப்பா ஐ குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் யாகபூஜைகளை நடத்தினர். தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு. அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டன. சுவாமி உருவப்படம் முன்பு வைத்து பூஜிக்கப்பட்ட செங்கலை ஏராளமானோர் வரிசையில் நின்று வாங்கி சென்றனர். புதுக்கோட்டைமதுரை, சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பனையப்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழா ஏற்பாடுகளை செவலூர் பூமிநாதர் ஆரணவல்லி வாஸ்து பூஜை நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.