அறந்தாங்கியில் இருந்து கே. புதுப்பட்டி, போசம்பட்டி, அணிக்கனி, வம்பரம்பட்டி, நம்பூரணிப்பட்டி, கல்லூர் வழியாக புதுவயல் வரை சென்ற அரசு டவுன் பஸ் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள 24ம் எண் டவுன் பஸ்சை மீண்டும் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.