பொன்னமராவதியில் மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது!

0பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தேவன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி (50). இவர் தேவன்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே, சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னமராவதி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பதிவுகளை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி