கூடலூரில் மது விற்பனையில் ஈடுபட்டவர் கைது

72பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அடுத்த கூடலூரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (34). இவர் கூடலூரில் உள்ள தனது வீட்டின் அருகில் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டு வந்தார். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த புதுக்கோட்டை மதுவிலக்கு போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ. 3144. 96 மதிப்புள்ள மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி