புதுகை திருமயத்தில் ப. சிதம்பரம் பேட்டி அளித்தார். இதில், வடநாட்டில் ஒரு மொழிக் கொள்கைதான் என்று நான் குற்றம் சாட்டுகின்றேன். வடமாநிலங்களில் நான் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருக்கிறேன். மக்களை சந்தித்துள்ளேன். அவர்களுக்கு ஒரு மொழி தான் தெரியும். பேச்சு மொழி இந்தி அரசு மொழி இந்தி பயிற்சி மொழி இந்தி தான். ஆங்கில ஆசிரியர்களே அரசு பள்ளிகளில் நியமிப்பது கிடையாது என குற்றம்சாட்டினார்.