புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே காரையூரில் மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் வழங்க வேண்டிய நிலுவை பணத்தை வழங்காத மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் மத்திய அரசுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதற்கு வடக்கு ஒன்றிய செயலாளர் முத்து தலைமை வகித்தார். இதில் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.