புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா மிரட்டுநிலையை சேர்ந்தவர் பெத்தான், விவசாயி. இவரது மகள் பாக்கியம்(22). அதே பகுதியில் உள்ள தனியார் ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் பி.எட்., படித்து வந்தார். சம்பவத்தன்று கல்லூரி செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பாக்கியத்தின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அரிமளம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.