சோழபிராட்டி அம்மன் கோவில் மாட்டு வண்டி எல்கைப் பந்தயம்!
புதுக்கோட்டை திருமயம் அருகே மாவூரில் சோழபிராட்டி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கைப் பந்தயம் தொடங்கி நடைபெற்று வருகிறது இதில் 52 மாட்டு வண்டிகள் பங்கேற்றன பெரிய மாடு, நடுமாடு கரச்சான் மாடு என்று மூன்று பிரிவுக்காக நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, தேவகோட்டை, ஆகிய ஊர்களில் உள்ள மாட்டு வண்டிகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசுகள் வழங்கப்பட்டன.