திருமயம் தாலுகா நச்சாந்துபட்டியில் நாகதேவி நல்லதங் காள் கோயில் உள்ளது.
இங்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் பஞ்சமி நாளில் உலக நன்மைக்காகவும், குழந்தை பேறு கிடைக் கவும், திருமண தடைகள் நீங்கவும், மக்கள் நோய் நொடியின்றி வாழவும், விவசாயம் செழிக்கவும் வேண்டி 3 நாட்கள் சிறப்பு வழிபாடு நடத்தப்படு வது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டு நாக பஞ்சமி விழா வரும் 8ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
மருங்கூரில் இருந்து நல்ல தங்காள் கோயில் பொங்கல் திடலுக்கு சுவாமி ஊர்வலம் வரும் 9ம் தேதி காலை கணபதி ஹோமம், கோ பூஜை, மகாலட் சுமி பூஜை, நாகபஞ்சமி பூஜைகள் நடத்தப்படுகின்றன. காலை 8. 30 மணிக்கு பெண்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து வந்ததும் அபிஷேகம் நடத்தப் படுகிறது. 10. 45 மணிக்கு மங்கல திரு முழுக்கு வழிபாடு நடக்கிறது. மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை நடக்கிறது. இதில் 508 சுமங்கலி பெண்கள் அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வழிபாடு நடத் துவார்கள்.
மறுநாள் 10ம் தேதி காலை 11. 45 மணியளவில் வழிபாடு முடிந்து பொங்கல் திடலில் இருந்து நல் லதங்காள், பரிவார தெய்வங்களுடன் கோயில் வீட்டை சென்றடைகிறது. யாகவேள்வி பூஜைகளை ரவிசங்கர் பட்டாச்சாரியார், திருவருள் நல்லி தெய் வீகப்பேரவை, நகரத்து பெருமக்கள், கீழத்தெரு, மேலத்தெரு பங்காளிகள், நச்சாந்துபட்டி ஊரார் செய்து வருகின்றனர்.