திருமயம் அருகே விபத்து: இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!

76பார்த்தது
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாளன்கரையில் இன்று நள்ளிரவு 12. 30 மணியளவில் இருசக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் சாலையில் கார் தலை குப்புற கவிழ்ந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற இரண்டு வாலிபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் உயிரிழந்தவர்கள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருமயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி