புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள ஏ. செட்டிபட்டியில் காமன் கோவில் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரு பிரிவுகளாக நடைபெற்றது. இதில் புதுக்கோட்டை, சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 16ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. போட்டி இரு பிரிவுகளாக நடைபெற்றது. பெரிய மாட்டு வண்டியில் 4 ஜோடிகளும் சிறிய மாட்டு வண்டி பந்தயத்தில் 12 ஜோடிகளும் கலந்து கொண்டனர். பெரிய மாட்டு வண்டிக்கு போக வர 12 கிலோ மீட்டரும் சிறிய மாட்டு வண்டிக்கு போக வர 9 கிலோமீட்டர் எல்கை நிர்ணயிக்கப்பட்டு போட்டியான நடைபெற்றது. சாலையில் துள்ளிக்குதித்து போட்டி போட்டுக் கொண்டு சீறிப்பாய்ந்த மாட்டு வண்டிகளை சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டுவண்டி உரிமையாளர்களுக்கும் அதனை ஓட்டி வந்த சாரதிகளுக்கும் ரொக்க பணம் மற்றும் கோப்பைகள் பரிசாக வழங்கப்பட்டது.