புதுக்கோட்டை, சந்தப்பேட்டை அரசினர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 2026 ஆம் கல்வி ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, இன்று பள்ளிகள் கோடை விடுமுறைக்கு பின் திறக்கப்பட்டது. புதிதாக பள்ளிக்கு வரும் மாணவ மாணவிகளுக்கு சகோதரத்துடன் சாதி மத பாகுபாடின்றி ஒற்றுமையுடன் கல்வி கற்க வலியுறுத்தி, பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் நைனா முகமது தலைமையில் ஆசிரியர்கள் புறாக்களை சமாதான புறாக்களாக பறக்கவிட்டு வரவேற்றனர்.