புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனையில் நிகழ்வில் பங்கேற்று வெளியே வரும் பொழுது அவருடைய காரை வழிமறித்து அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொது மக்கள் மனு வழங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பொதுமக்கள் வைத்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என ஆட்சியர் அருணா உறுதி அளித்தார்.