புதுக்கோட்டை ராணியார் அரசு மகப்பேறு மருத்துவமனை முன்பு, இன்று தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கத்தினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில், பணி பாதுகாப்பு வழங்க வேண்டும், காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.