புதுக்கோட்டை: விவசாயிகள் குறைதீர் கூட்டம்

82பார்த்தது
புதுக்கோட்டை: விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை: வரும் 21ம் தேதி காலை 10.30 மணியளவில் கலெக்டர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடக்கிறது. பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளனர். 

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது பயிர்ச்செய்கைக்கு தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்ளவதுடன் விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி