புதுக்கோட்டை பகுதியில் இன்று (மே 10) வெயிலின் தாக்கம் காலையிலே அதிகமாக காணப்படுகிறது. கத்திரி வெயில் தொடங்கிய நிலையில் இவ்வாறு வெயில் அடிப்பதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் சாலையோரம் வியாபாரம் செய்பவர்கள் உணவு டெலிவரி செய்பவர்கள் போன்றவர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். இந்த நேரத்தில் நீர் ஆதாரங்களை அதிகமாக கருத வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.