புதுக்கோட்டை நகர காவல் நிலைய எல்லைக்குள் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த திருட்டு வழக்குகளில் குற்றவாளியை கைது செய்ய இன்ஸ்பெக்டர் மருது தலைமையில் தனி படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். தகவலின் பெயரில் மதுரை பிபி குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் வயது (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை நகர் பகுதியில் வீடு புகுந்து திருடியது தெரிய வந்தது. மேலும் பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு உள்ளது. இது தொடர்பாக போலீசார் மணிகண்டனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 22. 5 பவுன் தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.