பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி: 3 மாணவிகள் தற்கொலை முயற்சி!

68பார்த்தது
புதுக்கோட்டை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட் டன. இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி மற்றும் மதிப்பெண் குறைவாக எடுத்ததில் 3 மாணவிகள் தற்கொலை முயற்சி யில் ஈடுபட்டனர். இதில் கறம்பக்குடியை சேர்ந்த மாணவி ஒருவரும், குளத்தூர் தாலுகா கீழையூர் பகுதியை சேர்ந்த மாணவி ஒருவரும், புதுக்கோட்டை செம்பட்டி விடுதி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாணவி ஒருவரும் விஷம் குடித்தும், மாத்திரையை தின்றும் தற் கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி