புதுக்கோட்டை: சாலையோர கடைகளில் விற்பனைக்கு குவிந்த மண் பானைகள்

78பார்த்தது
புதுக்கோட்டை: சாலையோர கடைகளில் விற்பனைக்கு குவிந்த மண் பானைகள்
புதுக்கோட்டையில் கொளுத்தும் வெயிலால் சாலையோர கடைகளில் மண்பானைகள் விற்பனைக்கு குவிந்தன. வெயில் தாக்கம் தமிழகத்தில் கோடை காலம் தொடங்குவதற்கு முன்பாக தற்போது வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளது. புதுக்கோட்டையில் வெயிலின் தாக்கம் கடந்த ஓரிரு நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. இந்த நிலையில் வெயில் உக்கிரமாக இருப்பதால் பொதுமக்கள் பலர் பகல் நேரத்தில் வெளியில் செல்வதில் சிரமம் அடைகின்றனர். வெயிலின் தாக்கத்தை சமாளிக்கவும் பொதுமக்கள் பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை கையாள தொடங்கியுள்ளனர். 

இந்த நிலையில் கோடை வெயிலையொட்டி புதுக்கோட்டையில் மண்பானைகள் விற்பனைக்கு அதிகமாக வரத் தொடங்கியுள்ளன. சாலையோர கடைகளில் மண்பானைகள் விற்பனைக்காக வித, விதமாக வைக்கப்பட்டுள்ளன. அதில் மண்பானையில் குடிநீர் குழாய் போன்று அமைத்து தண்ணீர் பிடிக்கும் வகையிலும், மண்பாண்டத்தில் ஜக் மற்றும் குடுவை, டம்ளர்கள், தண்ணீர் பாட்டில்கள் போன்றவை விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த மண்பாண்ட பொருட்களில் ஒரு சிலவற்றை கறம் பக்குடி அருகே மழையூரில் மண்பாண்ட தொழிலாளர்கள் உற்பத்தி செய்வதில் வியாபாரிகள் கொள்முதல் செய்து விற்கின்றனர். விற்பனை மும்முரம் மண்பானையில் தண்ணீர் ஊற்றி வைக்கப்படும் போது குளிர்ச்சியடைவதால், தாகத்தை தணிக்க அந்த தண்ணீரை குடிக்கும் போது உடல் குளிர்ச்சியடைகிறது.

தொடர்புடைய செய்தி