புதுக்கோட்டை சிப்காட் அருகே ரெங்கமாசத்திரம் பொதுமக்கள் குடிதண்ணீர் வேண்டி பலமுறை அதிகாரியிடம் கூறியும் நடவடிக்கை எடுக்காத காரணத்தால் புதுக்கோட்டை திருச்சி நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அப்பொழுது வெள்ளனூர் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர். அங்கு வந்த பொதுமக்களும் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி கலைந்து சென்றனர்.