மச்சுவாடியில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டிகள் இன்று (டிசம்பர் 26) துவங்கின. 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்று வருகின்றனர். இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் திருச்சி மண்டலத்துக்குட்பட்ட போட்டியில் பங்கேற்பர். அதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான சதுரங்க போட்டியில் பங்கேற்பர் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளரும் நடுவருமான பார்த்திபன் தெரிவித்தார்.